follow the truth

follow the truth

July, 24, 2025
HomeTOP1ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை

Published on

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு நாளை (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களையும் இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இந்த சர்வகட்சி கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானத்தினை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைப்பு

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய செயல்முறைகள் வருமாறு நடைபெறுகின்றன: 🔹 முற்பகல் 9.30 - 10.00 பாராளுமன்ற நிலையியற்...

இன்று சில பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...