ஆடைத் தொழிலின் நிலையான இருப்புக்கு புதிய சந்தைகளுக்கு பிரவேசிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்

145

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்நாட்டின் ஆடை ஏற்றுமதியில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையை சமாளித்து புதிய உத்திகள் மூலம் தீர்வுகளை வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆடை Orders குறைந்து வருவதால், சில பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், தங்கள் சேவைத் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும், தங்கள் தொழிற்சாலைகளின் திறனைக் கட்டுப்படுத்துதல், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான வேறு தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை இடம் மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) கூறுகிறது.

No description available.

இந்த நாட்டில் ஆடைத் துறையின் சவாலான மற்றும் கட்டுப்படுத்த முடியாத காரணிகளின் அடிப்படையில், துறையின் முன்னேற்றத்திற்காக நிலையான நிர்வாக முடிவுகள் எட்டப்பட்டன. எந்தவொரு பெரிய நிறுவனமும் இலங்கையை விட்டு வெளியேறவோ அல்லது அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஒன்றிணைந்த ஆடைச் சங்கஙிகளின் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற புதிய சந்தைகளில் நுழைய, நாம் உடனடியாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை உற்பத்தியாளர்கள் சில சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் பிரதித் தலைவர் ஃபீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “சர்வதேச Orderகளின் குறைவினால், ஆடைகளுக்கான தேவை சுமார் 25%ஆல் குறைந்துள்ளது, மேலும் இந்த நிலைமையை மேம்படுத்த அனைத்து சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களும் தங்களால் இயன்றவரை முயற்சித்துள்ளன.

மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் வேலை இழப்புகள் பற்றிய சரியான தரவு எங்களிடம் இல்லை, ஆனால் அனைவரையும் பாதித்துள்ள இந்த நிலைமையை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம் என்று சொல்லலாம். சில நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது உண்மைதான்.

மேலும், சில நிறுவனங்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேலை செய்து மாத சம்பளம் கொடுக்கின்றன. தொழிலாளர் ஆணையாளரின் ஒப்புதலைப் / அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தற்காலிகமாக கோவிட் காலத்திலும் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட காலத்திலும் சம்பளத்தில் 50% வழங்கப்பட்டது.” என தெரிவித்தார்.

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் உப தலைவர் ஃபீலிக்ஸ் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்பில் இருந்து முற்றாக விடுபடவோ அல்லது அதனைக் கட்டுப்படுத்தவோ சம்பிரதாயப்பூர்வமான நடவடிக்கை திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

2023 இல் முடிவடைய இருக்கும் GSP+ முன்னுரிமை வரிச் சலுகையை மேலும் நீடிப்பு, இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்படும் ஆடை ஒதுக்கீட்டை கணிசமான மதிப்பில் அதிகரிப்பது மற்றும் சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கு வசதியாக, அந்த நாடுகளுடன் தாமதிக்காமல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து சக்தி உற்பத்திச் செய்வதன் மூலம் செலவைக் குறைத்தல், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைத்தல், அரசாங்க செலவினங்களைக் குறைத்தல் மற்றும் நேரடி வரி வருமானத்தை அதிகரித்தல், இலங்கையின் மீட்சி போன்ற முன்மொழிவுகளை துரிதப்படுத்துதல்.

பொருளாதாரம், வங்கி வட்டி விகிதம் மற்றும் பணவீக்கத்தை மீண்டும் குறைந்த நிலைக்கு கொண்டு வருவது போன்ற மேக்ரோ பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டங்களின் மூலம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்நாட்டில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களுக்கு அந்நாடுகளில் வணிகர்கள் வழங்கும் Ordersகளின் தொகை 15% – 20% வீதத்தினால், குறைந்துள்ளதாகவும், இந்நிலைமை நாட்டின் ஏற்றுமதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஆடைத் தொழில்துறைக்கு பொற்காலமாக அமைந்ததுடன், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்தது, தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் இவ்வருடம் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரால் குறையக்கூடும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் உப தலைவர் ஃபீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நிலை 2023 இறுதிக்குள் சாதகமான நிலையை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here