அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு தகுதி பெற்றவர் என்பதற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ள எல்ல பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று(27) வரிசையில் காத்திருந்த 77 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நமுனுகுல பிங்அராவ தோட்டத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான இராமசாமி குழந்தைவேலு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.