ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 123,000 ஐத் தாண்டியது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 125,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகளின்படி, இம்மாதத்தின் முதல் 27 நாட்களில் 123,503 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 748,377 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.