ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் இன்று ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இன்று உக்ரைன் தரப்பில் இருந்து 3 டிரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டது.
அந்த டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதி வெடித்ததில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விமான நிலையம் மூடப்பட்டது.
மாஸ்கோ தெற்குப் புறநகரில் உள்ள வனுகோவா விமான நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு எந்த விமானங்களும் வரவில்லை.
மேலும் மாஸ்கோ மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது