முல்லேரியா களனிமுல்லையில் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயணைப்பு நடவடிக்கைகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இடத்திற்கு சிலர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தீ விபத்து தொடர்பான விசாரணைகளை முல்லேரிய பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.