follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1சுகாதாரப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

சுகாதாரப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

Published on

நாளை (03) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதார சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதைத் தடைசெய்து சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுகாதார செயலாளர் இன்று (02) கலந்துரையாடல் ஒன்றை வழங்கியதன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மேலும், தொழிற்சங்கங்களை நசுக்குவதற்கு தாம் செயற்படப்போவதில்லை என்றும், சுகாதாரச் செயலர் சுகாதார சேவையின் நல்வாழ்வுக்காக கருத்து வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...