follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1இலங்கையர்கள் மீதான பண்டோரா விசாரணை முடங்கியதா?

இலங்கையர்கள் மீதான பண்டோரா விசாரணை முடங்கியதா?

Published on

சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுமார் இரண்டு வருடங்களாக இறுதி அறிக்கை எதனையும் தயாரிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் திணைக்களம் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வழங்கியிருந்தது.

இதன்படி, பண்டோரா ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரிப்பணம் செலுத்தியமை தொடர்பான கோப்புகள் மற்றும் வரி ஏய்ப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்திருந்தது.

நீதிமன்றத்தால் அது தொடர்பான அறிக்கைகளை வழங்குவதற்கு உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் கடமைப்பட்டிருப்பதாக திணைக்கள வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலக வல்லரசுகள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களின் வரி ஏய்ப்பு, சட்டவிரோதமாக சொத்து குவிப்பு மற்றும் பணமோசடி நடவடிக்கைகள், அரசியல் தொடர்புள்ள இலங்கையர் திருகுமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ ஆகியோரின் தகவல்களும் அம்பலமானமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை 2025 மாதத்திற்கான பணவீக்கம் -0.3% ஆக உயர்வு

நாட்டின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், பணவீக்கம் ஜூலை 2025 இல் -0.3% ஆக உயர்ந்துள்ளதாக...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...