follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1தேசிய கீத விவகாரம் குறித்து துரித விசாரணை நடத்த சிஐடி இற்கு கோரிக்கை

தேசிய கீத விவகாரம் குறித்து துரித விசாரணை நடத்த சிஐடி இற்கு கோரிக்கை

Published on

இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதம் குறித்து பாடகி உமாரா சின்ஹவன்ச தனது முகநூல் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

தன்னால் பாடிய தேசிய கீதத்தின் சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர் என்ற வகையில் இலங்கையின் கொடியை மிகவும் பெருமையுடன் தான் உயர்த்தியுள்ளதாகவும், தாய்நாட்டை நேசிக்கும் பாடகியாக தாம் நாட்டின் பெருமையை எக்காலத்திலும் உயர்த்துவதற்காக பல்வேறு வழிகளில் உழைத்துள்ளதாகவும் உமாரா சிங்ஹவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தின் வார்த்தைகளை திரிபுபடுத்தவோ அல்லது எந்தவிதமான விளக்கத்தை வழங்கவோ தான் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பாடகி உமாரா சின்ஹவன்ச தனது முகநூல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும், தான் பாடியதால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும், தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் மட்டத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்ஹவன்ச இன்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை 2025 மாதத்திற்கான பணவீக்கம் -0.3% ஆக உயர்வு

நாட்டின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், பணவீக்கம் ஜூலை 2025 இல் -0.3% ஆக உயர்ந்துள்ளதாக...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...