follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉலகம்தலைமை இறந்துவிட்டதை உறுதி செய்த ISIS

தலைமை இறந்துவிட்டதை உறுதி செய்த ISIS

Published on

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு அல் ஹுசைன் அல் ஹுசைனி அல் குரேஷி சிரியாவில் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது.

சிரியாவின் இட்லிப் பகுதியில் துருக்கியின் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் நடந்த மோதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டெலிகிராம் சேனலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், மரணம் எப்போது நிகழ்ந்தது என்பதை செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில், தனது அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான அபு உமர் அல்-முஜஹிர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பினால் கைப்பற்றப்பட்டதை ஐஎஸ்ஐஎஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு ஹஃப்ஸ் அல் ஹஷேமி அல் குரேஷியை நியமித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குரேஷி, நீண்ட கால ISIS தலைவர் அமெரிக்கர்களால் கொல்லப்பட்ட அபு பக்கர் அல்-பாக்தாதியின் மரணத்தைத் தொடர்ந்து அமைப்பின் மூன்றாவது தலைவராக நம்பப்படுகிறது.

அந்த அமைப்பின் தலைவர் மோதலில் இறந்துவிட்டதாக துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் அர்தோகன் சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு...

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...