சீதாவக ஒடிஸி’ கொழும்புக்கும் அவிசாவளைக்கும் இடையில் இன்று முதல் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
வழமையான ஞாயிறு பயணங்களுக்கு மேலதிகமாக, இன்று முதல் சனிக்கிழமைகளில் சீதாவக ஒடிஸி சொகுசு ரயில் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான சுற்றுலாத்தலமான சீதாவகவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ரயில் ஆரம்பிக்கப்பட்டது.