வெலிவேரிய அம்பறலுவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காரில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் வந்த இருவர் காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.