கேகாலை – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

322

வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கபுலுமுல்லை ரஜமஹா ஆலயத்திற்கு அருகாமையில் வருடாந்த ஊர்வலம் இன்று (05) இரவு ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கேகாலை அவிசாவளை வீதியூடாக வண்டல ஆலயம் வரை பயணிக்கவுள்ளது.

எனவே, இன்று இரவு 09.00 மணி முதல் நாளை (06) காலை 03.00 மணி வரை, கேகாலை அவிசாவளை வீதியில் சில வீதித் தடைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here