follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉலகம்ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு மேலும் 19 ஆண்டு சிறை தண்டனை

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு மேலும் 19 ஆண்டு சிறை தண்டனை

Published on

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் பயன்படுத்தியமை தொடர்பில் அலெக்ஸி மீது தொடரப்பட்ட வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தொடர்ந்து மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...

சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை

சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள்...

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா - முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று...