விஸ்தரிப்பு பணிகள் காரணமாக 15 மணிநேர நீர் வெட்டு

984

எதிர்வரும் 9ஆம் திகதி காலை 9:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 15 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அளுத்கம, மத்துகமை, அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியாவசிய விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதுவை, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, போம்புவல, கட்டுக்குருந்தை, நாகொட, பயாகல, மக்கொனை, தர்காநகர், அளுத்கமை, களுவாமோதர, மொரகல்ல, பிலம்னாவத்த மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here