சமனல ஏரியிலிருந்து நீர் விடுவித்தல் – இன்று மீண்டும் அமைச்சரவைக்கு

278

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இன்று (07) மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் வளவ பிரதேச விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு தீர்வாக சமனல ஏரியின் நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here