follow the truth

follow the truth

August, 7, 2025
HomeTOP3அரசியல்வாதிகளின் கருத்துக்களால் தென்னிலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை

அரசியல்வாதிகளின் கருத்துக்களால் தென்னிலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Published on

ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கிராமிய வீதி அபிவிருத்திக்கான கோரிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறது. எனினும், கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதேபோல் வரும் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் வெளிநாட்டு நிதிகள் மூலம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிகமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றார். பாராளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கு, மக்கள் பிரதிநிதிகளிடம் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார். அண்மையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து கட்சிகளையும் அழைத்து சர்வகட்சி மாநாடு ஒன்றையும் நடத்தினார். ராஜீவ் – ஜே. ஆர் ஜயவர்தன ஆகியோர் அன்று 13 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது அன்றைய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக அங்கம் வகித்த தற்போதைய ஜனாதிபதி, இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை முன்வைப்பார் என்று எனக்கு நம்பிகை இருக்கின்றது.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார். ஆனால் இதில் பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் இவை பெரும்பாலும் அரசியல் நோக்கங்களில் கூறப்படலாம் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இரு தரப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நம்பிக்கை வைத்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் காலங்களில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று அமைச்சு திட்டமிட்டுள்ள எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பாக கப்பற்றுறை, உற்பத்தித் துறை, சுற்றுலா வலய மேம்பாடு, ஏற்றுமதி பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு, மீன்படி மற்றும் உள்நாட்டில் பயிரிடக் கூடிய தானியங்களைப் பயிரிடல் போன்ற பல்வேறு பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் முந்திரி பயிர்ச்செய்கையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான அரச காணிகளை இதற்காக பயன்படுத்தவுள்ளதாகவும், இத்திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...