பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு நீதிமன்றம் தடை

280

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம் என தெரிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றமும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here