follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஒரே நாடு ஒரே சட்டம் செயலணி! உறுப்பினர்களுக்கு கடிதம் கூட கிடைக்கவில்லை எனத் தகவல்

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி! உறுப்பினர்களுக்கு கடிதம் கூட கிடைக்கவில்லை எனத் தகவல்

Published on

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயல்படுத்த நியமிக்கப்பட்ட செயலணி குறித்து தற்போது சமூகத்தின் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இதுகுறித்த கடிதங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று செயலணியில் உள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

செயலணியின் செயற்பாடுகள் குறித்தும் அங்கத்தவர்கள் குறித்தும் கேட்டபோது, தனக்கு இன்னமும் நியமனக் கடிதம் கூட கிடைக்கவில்லை என்றும், கடிதம் கிடைத்த பின்னரே ஊடங்களுக்கு இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் செயலணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரு நாட்டின் சட்ட வரைவொன்று குறித்து சிபாரிசு செய்வதற்கு மதத் தலைவர்களை நியமித்துள்ளமையும், நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவர் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமையும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது,

செயலணியின் தலைமைப் பதவிக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளே இருக்கும் உறுப்பினர்களும் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பௌத்த தேரர்களும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...