நடத்துனர்கள் இல்லாத பேருந்துகள் இன்னும் 3 மாதங்களில் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இவ்வாறு தெரிவித்தார்.
இலத்திரனியல் அட்டை மூலம் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்றும், இந்த பஸ்களை இயக்குவதன் மூலம் கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.