follow the truth

follow the truth

August, 20, 2025
Homeஉள்நாடுஅஸ்வெசும மற்றும் சமுரத்தித் திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

அஸ்வெசும மற்றும் சமுரத்தித் திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Published on

இலங்கை சமுர்த்தி அதிகாரசபையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள்
குழுவொன்றுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்கக்
கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியது.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுமற்றும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் என்பன கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டபோது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (09) கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்தாதது குறித்து கோபா குழு கேள்வி எழுப்பியது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் கேட்ட போது, ​​நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விடயத்தை கையாள முடியும் எனக் கோபா குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடி அதற்கான பதில்களை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் பரிந்துரைத்தார்

அத்துடன் அஸ்வெசும வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் என்பவற்றை இணைந்து செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மானியம் வழங்கப்படுவதாகவும், அதே குறைந்த வருமானம் பெறுவோர் சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வலுவூட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே இந்த இரண்டு திட்டங்களையும் கூட்டாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோபா குழு வலியுறுத்தியது. இது தவிர சமுர்த்தி வங்கிகளின் பங்களிப்பு மற்றும் அஸ்வெசும கொடுப்பனவை சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...