குருநாகல், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை, பண்டாரவளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த நீர் வழங்கல் அமைப்புகளில் கண்காணிப்பு அமைப்பின் கீழ் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக அபிவிருத்தி பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.