follow the truth

follow the truth

August, 20, 2025
Homeஉள்நாடுஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம் இரத்து

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம் இரத்து

Published on

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்திற்கான முதலீட்டு சபை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திட்ட ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக இலங்கை முதலீட்டுச் சபைக்கும் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு 2019 செப்டெம்பர் 17ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து 1200 ஏக்கர் காணி ஐம்பது வருட குத்தகை அடிப்படையில் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட போதிலும் குறித்த நிறுவனம் காணிகளை சுவீகரிப்பதற்கோ அல்லது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...