follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம் இரத்து

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம் இரத்து

Published on

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்திற்கான முதலீட்டு சபை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திட்ட ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக இலங்கை முதலீட்டுச் சபைக்கும் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு 2019 செப்டெம்பர் 17ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து 1200 ஏக்கர் காணி ஐம்பது வருட குத்தகை அடிப்படையில் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட போதிலும் குறித்த நிறுவனம் காணிகளை சுவீகரிப்பதற்கோ அல்லது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...