ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டத்திற்கான முதலீட்டு சபை ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திட்ட ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக இலங்கை முதலீட்டுச் சபைக்கும் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு 2019 செப்டெம்பர் 17ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து 1200 ஏக்கர் காணி ஐம்பது வருட குத்தகை அடிப்படையில் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட போதிலும் குறித்த நிறுவனம் காணிகளை சுவீகரிப்பதற்கோ அல்லது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.