follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் மனநல மருத்துவமனைக்கு

போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் மனநல மருத்துவமனைக்கு

Published on

பாடசாலைகள் மற்றும் அது தொடர்பான பிரதேசங்களில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் முறையாகச் செயற்படுவதில்லை எனத் தெரியவந்துள்ளது.

பல பாடசாலைகளில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் சில மாணவர்கள் அவற்றிற்கு அடிமையாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதிபர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை நிறுவுவது வலயக் கல்விப் பணிப்பாளரின் பொறுப்பாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) நடைபெற்ற கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிராமிய மட்டத்தில் பரவும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு கண்காணிப்புக் குழுக்கள் சிறந்த சேவையை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை எச்சரித்து, அவர்களை மனநல மருத்துவ மனைகளுக்கு அனுப்புமாறும் அமைச்சர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன் பின்னர், அதிபர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அந்த மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...