ஒக்டோபர் மாதம் வரை கடும் மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்தார்.
பொதுவாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்யும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் வானிலை நிலை குறித்து இம்மாத இறுதியில் மறு ஆய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரோமணி ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.