follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉள்நாடுஉயர்தரத்திலான மருந்துகளை நியாயமான மற்றும் மலிவு விலையில் வழங்குவதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு

உயர்தரத்திலான மருந்துகளை நியாயமான மற்றும் மலிவு விலையில் வழங்குவதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு

Published on

தற்போதைய அரசாங்கம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நாட்டின் சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் மற்றும் மருத்துவ கவுன்சில் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தச் சட்டங்களில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாம் நம்பினாலும், இந்தச் சட்டங்களை முற்றாக நீக்குவது என்பது மருந்து மாபியாவுக்கு இடம் கொடுப்பதும், பல்வேறு பல்தேசிய மருந்துக் கம்பெனிகள் தலைமையிலான சர்வதேச நிறுவனங்களை நாட்டின் மருந்துக் கொள்கையை கையாள அனுமதிப்பதும்தான் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு இன்று(21) நடத்திய கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நேரத்தில், சுகாதாரத் துறை ஒரு பேரழிவாக மாறியுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களால் புத்திசாலிகள் வெளியேற்றம் போலவே மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர் என்றும், உயர்தரத்திலான மருந்துகளை நியாயமான மற்றும் மலிவு விலையில் வழங்குவதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும், தற்போதைய அரசாங்கம் கட்டளைச்சட்டங்கள், ஆணைகளை பயன்படுத்தி கொள்முதல் முறைகளை புறக்கணித்து, அமைச்சரினதும் செயலாளரினதும் ஆட்சியாளர்களினதும் விருப்பத்திற்கு ஏற்ப மருந்துத் தொழிலில் ஒரு நட்புவட்டார முதலாளித்துவத்தை உருவாக்கி, தனது நண்பர்களுக்கு மருந்துப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதியளித்து சந்தையில் வெளியிடுவதற்கும் அனுமதித்து இதன் மூலம் தரம் தாழ்ந்த மருந்து மாபியாவின் செயற்பாட்டை அனுமதித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நாட்டில் இயங்கிவரும் மருந்துப்பொருள் மாபியாவை நிறுத்த வேண்டும் என்றும், இந்த ஊழல் முறைகளை தோற்கடிக்க வேண்டும் என்றும், இது பொதுச் சொத்துக்களையும், மக்களின் பணத்தையும் கொள்ளையடிக்கும் செயலாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துகளை ஒரே நேரத்தில் இறக்குமதி செய்து மக்களின் பணத்தை வீணடிக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாமானியர்களின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் செல்லும் கொள்கைகளுக்காக முன் நிற்பதா என்பதை முடிவு செய்ய வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...