தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

134

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்தத் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த 24 திட்டங்களில் 09 திட்டங்கள் பல்வேறு தொடர்புடைய நிறுவன சிக்கல்களால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் 56,529 மில்லியன் ரூபாவாகும். அந்த 09 திட்டங்களுக்கு சுமார் 1,180 மில்லியன் ரூபாய்கள் ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது. இன்னும் 14 மில்லியன் ரூபா பணம் செலுத்த வேண்டியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here