முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பபுறக்கணிப்பை முன்னெடுத்தனர்.
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்ற விவாதத்தின் போது விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது எனவும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகளும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.