follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபண்டாரவளை ஹோட்டல் கொலை - பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

பண்டாரவளை ஹோட்டல் கொலை – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Published on

பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபர் எடம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரை ஹோட்டலில் உள்ள அறைக்குள் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

களனியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் நேற்று முன்தினம் குறித்த ஹோட்டலுக்குச் சென்று குறித்த பெண்ணை நேற்று விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாலையில் சந்தேகநபர் ஹோட்டலை விட்டு அவசரமாக வெளியேறியதால், ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அறையை சோதனையிட்டபோது பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவியை நாடிய பொலிஸார், தகவல் தெரிந்தால் 071 8591523 / 071 8710108 / 071 8594033 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...