பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர் எடம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரை ஹோட்டலில் உள்ள அறைக்குள் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
களனியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் நேற்று முன்தினம் குறித்த ஹோட்டலுக்குச் சென்று குறித்த பெண்ணை நேற்று விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாலையில் சந்தேகநபர் ஹோட்டலை விட்டு அவசரமாக வெளியேறியதால், ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அறையை சோதனையிட்டபோது பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவியை நாடிய பொலிஸார், தகவல் தெரிந்தால் 071 8591523 / 071 8710108 / 071 8594033 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.