பண்டாரவளையில் விடுதி ஒன்றில் வைத்து பெண்ணொருவரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, இன்று அதிகாலை பண்டாரவளை பொலிஸ் அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.