follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்சவுதியில் மாணவர்கள் விடுமுறை எடுத்தால் கடும் சட்ட நடவடிக்கை

சவுதியில் மாணவர்கள் விடுமுறை எடுத்தால் கடும் சட்ட நடவடிக்கை

Published on

சவுதி அரேபியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை விதிகளை அந்நாட்டின் அரசு கடுமையாக்கி உள்ளது.

அதன்படி, சவுதி அரேபியாவில் மாணவர்கள முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு விடுமுறை எடுத்தால் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதில், பெற்றோர்கள் கைதாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் நடவடிக்கை நாட்டின் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்றதாகவும், எதிர்வரும் கல்வியாண்டில் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வராத மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு எதிரான சட்ட நடைமுறை பல நிலைகளை உள்ளடக்கியது. பாடசாலை தலைமையாசிரியர் இந்த வழக்கை சம்பந்தப்பட்ட கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அது விசாரணையைத் தொடங்கும். இதையடுத்து, வழக்கின் விசாரணையை கல்வி அமைச்சகம் மேற்கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...