நாட்டில் இதுவரை 35 ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 3 ஆமைகளின் ஓட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான சிகிச்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே மேற்கு கடற்கரையில் கடலாமைகள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு டைனமைட் எனப்படும் வெடிமருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக கடலில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதன் காரணமாக ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் சந்தேகிக்கின்றது.