நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான முன்னோடி காப்புறுதி திட்டமான “SLIC ஜீவன சக்தி” அறிமுகபடுத்தி வைக்கப்பட்டது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று(05) ஹில்டன் கிரேன்டில் நடைபெற்றது.
“SLIC ஜீவன சக்தி” என்பது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதி திட்டமாகும்.
பெருந்தோட்டதுறையில் தொழில்நேரத்தில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்கருதி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர் ஒருவர் தமக்கான பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு 3 ரூபாவையே ஒதுக்க வேண்டும், எனவே, இத்திட்டம் வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.