follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமெனிங் சந்தைக்கு புதிய பேருந்து சேவை?

மெனிங் சந்தைக்கு புதிய பேருந்து சேவை?

Published on

பேலியகொடை மெனிங் சந்தையில் இம்மாதம் முதல் புதிய நிறுவனமொன்றின் மூலம் குப்பைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி அபிவிருத்தி) ஈ.ஏ.சி. பிரியஷாந்த தெரிவித்தார்.பேலியகொடை மெனிங் சந்தையில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கு முகமாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதுவரை செயற்படுத்தியுள்ள செய்கைகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி அபிவிருத்தி), இ.ஏ.சி. திரு.பிரியஷாந்த இன்று (7) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
அபிவிருத்தித் திட்டத்தின் படி, கொழும்பில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த மெனிங் சந்தையை, 13 ஏக்கர் பரப்பளவில் பேலியகொடைக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கொண்டு வந்தது. பேலியகொடைக்கு கொண்டு வந்த பின்னர், எந்தவொரு வியாபாரியும் நெடுஞ்சாலைகள் ஊடாக இந்த இடத்தை அடைய முடியும். சந்தை இடப்பெயர்ந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட முடியும். சந்தையை கொண்டு வருவதால் மொத்த வியாபாரத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும். ஆனால், பயணிகள் போக்குவரத்து பஸ்கள் அவ்வழியாக இல்லாததால், சில்லரை வியாபாரத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து சிக்கல்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்குவது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடம் பலமுறை பேசியுள்ளோம். ஆனால் அது தோல்வியடைந்தது. அந்த வீதிகளில் போதிய ஆட்கள் பஸ்களில் ஏறாததால் போக்குவரத்து துறைக்கு பிடிக்கவில்லை, ஆனாலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...