follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான யோசனை அமைச்சரவைக்கு

பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான யோசனை அமைச்சரவைக்கு

Published on

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” அவசியப்படுகிறது. அதன்படி இந்த மீளாய்வு மாநாட்டில் 2023 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

அதற்கமைய,

  • 2030 இல் இலங்கையின் மூலோபாய அறிவு மற்றும் சவால்கள்.
  • இலங்கையின் பாதுகாப்பு முக்கியத்துவம்.
  • 2030 பாதுகாப்பு கொள்கையின் நோக்கங்கள்.
  • மூலோபாய சவாலை எதிர்கொள்ளும் இயலுமை மற்றும் வலு.
    தற்போதுள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்.
  • உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல்.

இதற்காக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க (ஓய்வு) தலைமையிலான, மீளாய்வுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதோடு, அந்த குழுவில் ரியர் அட்மிரல் ஜே.ஜே.ரணசிக் (ஓய்வு), மேஜர் ஜெனரல் ஜீ.ஆர். வணிகசூரிய (ஓய்வு), எயார் வைஸ் மார்ஷல் எண்ட்ரூ விஜேசூரிய (ஓய்வு), சஷிகலா பிரேமவர்தன (இலங்கை வெளிநாட்டுச் சேவை) டேனியல் அல்போன்ஸ் (ஆலோசகர் – நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேவையிலிருக்கும் முப்படை அதிகாரிகள், வெளிநாட்டு சேவை அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள செயலாளர் ஒருவரும் பணிக்குழுவும் அதற்காக ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...