தலவாக்கலை, வடகொட நிலையத்திற்கு அருகில் மலையக புகையிரதத்தில் இன்று மாலை புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலின் எஞ்சின் பகுதி தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.