அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) முன்னிலையில் முதல் முறையாக மில்கோ நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மில்கோ நிறுவனத்தை கோப் மற்றும் கோபா குழுவுக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.