follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஇலங்கை தொழிலாளர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பு

இலங்கை தொழிலாளர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பு

Published on

கொரிய குடியரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் லீ ஜங்-ஸிக் (Lee Jung-sik) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கொரிய குடியரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் லீ ஜங்-ஸிக் குறிப்பிடுகையில், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு அமைய கொரிய வேலைவாய்ப்பு அனுமதி முறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

விசேடமாக இந்த மறுசீரமைப்பின் ஊடாக இலங்கைக்கான வாய்ப்புக்களைப் பல்வேறு கைத்தொழில் துறைகளுக்கும் விசேட சேவைத் துறைக்கும் விரிவுபடுத்த தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையர்களுக்கு கொரிய மொழியை கற்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த கொரிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) உற்பட கொரியாவின் ஏனைய ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களை மேலும் தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கொரியாவிலுள்ள இலங்கை தொழிலாளர்களால் இலங்கை பொருளாதாரத்துக்கு அதிகளவு பலனளிப்பதாகவும், இலங்கை பணியாளர்களுக்குப் பல்வேறு வேலைவாய்ப்புத் துறைகளில் பணியாற்றுவதற்கு அதிக சந்தர்ப்பம் வழங்குமாறு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) இலங்கைக்குத் தொடர்ந்தும் வழங்கிவரும் உதவிகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...