follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுநவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டம்

நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டம்

Published on

நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை முறையாக அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டத்திற்கு மேல் மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டது.

பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்கு முன்னர் மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் அனுமதி பெறப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள மேல்மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

பாடசாலையின் ஆபத்தான கட்டிடங்களை அகற்றி பாடசாலையின் தேவைக்கேற்ப கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா கல்வி கோட்டத்தில் 24 பாடசாலைகளையும் மினுவாங்கொடை கல்வி கோட்டத்தில் 34 பாடசாலைகளையும் இலக்கு வைத்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...