follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவணிகம்SVATஐ ரத்து செய்ய அரசு எடுத்துள்ள முடிவுக்கு JAAF பெரும் வரவேற்பு

SVATஐ ரத்து செய்ய அரசு எடுத்துள்ள முடிவுக்கு JAAF பெரும் வரவேற்பு

Published on

01 ஏப்ரல் 2025 வரை எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) ஒழிப்பை ஒத்திவைக்க அண்மையில் அமைச்சரவை எடுத்த முடிவிற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது.

SVAT ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் “வலுவான வரி திரும்பப்பெறும் பொறிமுறையை” நிறுவுவதை உறுதி செய்வதற்கான முடிவை JAAF குறிப்பாகப் பாராட்டியுள்ளது. தொழில்துறையைப் பாதுகாக்க பல்வேறு தரப்பினர் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை இந்த முடிவு காட்டுகிறது மற்றும் அவர்களின் முயற்சிகளுக்காக JAAF அவர்களையும் பாராட்டியுள்ளது.

ஆடை ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி குறைந்து நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முறையான பணத்தைத் திரும்பப்பெறும் வழிமுறை இல்லாமல் SVATஐ அகற்றுவது அவர்களின் பணப்புழக்கத்திற்கு இடையூறு ஏற்படும் அவதானம் உள்ளது. எனவே இந்த ஒத்திவைப்பு அவர்களுக்கு அந்த ஆபத்தைத் தவிர்க்க உதவுகிறது.
SVAT முறையை ஒழிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையாக வலுவான வரி திரும்பப்பெறும் பொறிமுறையை நிறுவும் வரை முறையான அணுகுமுறை தேவை என்று ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“இந்த ஒத்திவைப்பு புதிய வரி முறைக்கு மாற்றத்தை எளிதாக்குவதன் மூலம் எங்கள் தொழில்துறைக்கு முக்கியமான ஒத்துழைப்புக்களை வழங்குகிறது. தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைவதையும் செழிப்புடன் இருப்பதையும் உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என JAAF வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...

HP மடிகணனிகளுக்கு 3 வருட பிரத்தியேக உத்தரவாதம்

Intel மற்றும் AMD புரொசசர்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட HP மடிகணனிகளுக்காக மூன்று வருடத்திற்கான விசேட உத்தரவாதத்தினை HP இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்தவன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. காரணம், இது தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் முக்கிய நன்மைகளுக்கான அணுகலையும்...