follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு“புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” வெளியுறவு அணுகுமுறை வெளியீடு

“புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” வெளியுறவு அணுகுமுறை வெளியீடு

Published on

பெக்டம் சிந்தனைக் கொத்து நிறுவனத்தினால் “புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” என்னும் பெயரிலான வெளியுறவு அணுகுமுறை வெளியிடும் நிகழ்வு நேற்று (19) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்றது.

இதன்போது, நூலின் எழுத்தாளரான உதித தேவப்பிரியவினால் நூலின் பிரதி, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

பெக்டம் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆலோசகருமான கலாநிதி ரங்க கலன்சூரிய, நாட்டின் ஒன்பது மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் நடத்தப்பட்ட ஆலோசனை செயலமர்வுகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான நேர்க்காணலின் தகவல்களை அடிப்படையாக கொண்டு நூல் எழுதப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய சகலரும் 30 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பது சிறப்பம்சமாகும். அவர்கள் இலங்கையின் 09 மாகாணங்களையும் உள்வாங்கும் வகையிலான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமான நாடு என்ற நோக்கத்திற்கு இணங்கிச் செயற்படுவோர் எனவும் ரங்க கலன்சூரிய சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வெளிவிவகார கொள்கைக்கு இணையான கலந்துரையாடலின் முக்கியமான மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் நாட்டின் எதிர்காலத்திற்கான மூலோபாய மார்க்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதை இந்த நூல் உறுதிப்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...