பதுளையிலிருந்து கண்டிக்கு ரயில் கிரேட்வெஸ்டன் பகுதியில் தடம்புரண்டமையினால் மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் ரயில் சேவை நானுஓயா வரையில் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நாவலபிட்டி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அத்துடன் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ள ரயிலை ஹப்புத்தலை வரை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.