காலியில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.