பின்னவல – கித்துல்கல அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைக்க வேலைத்திட்டம்

296

பின்னவல மற்றும் கித்துல்கல சுற்றுலா வலயங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவசர வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று (23) இடம்பெற்றது.

குறித்த பிரதேசங்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கு தனியார் துறையினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here