follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை

Published on

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும், தடையின்றி நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவுவதே இதற்குக் காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.

அதன் பிரகாரம் அம்பாறை, மொனராகலை, பிபில மற்றும் சீலத்தனை ஆகிய நீர் விநியோக முறைமைகளில் இருந்து கண்காணிப்பு முறைமையின் கீழ் நீர் விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...