துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானை சிகிச்சைக்காக கண்டிக்கு

194

மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சீதா யானை தற்போது பேராதனை கால்நடை வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அஷோக தங்கொல்லவின் தலைமையில் சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை பெரஹராவில் ஊர்வலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த போது, சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

யானையின் உடலில் 8 ரவைகள் உள்ளமை ஸ்கேன் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீதா யானையின் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தூள் வகையை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு மேம்பாட்டு அமைச்சினால் சுயதீன விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here