டிப்போ அருகிலுள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

189

டிப்போக்கள் மற்றும் பஸ் தரிப்பிடங்களுக்கு அருகாமையில் அபாயகரமான மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேருந்துகளை இயக்கும் போது பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி பேருந்துகளை இயக்க வேண்டாம் என அனைத்து டிப்போக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here