சுங்கத்துறைக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் 25% வாகன இறக்குமதி மூலம் கிடைப்பதாகவும், அதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சுங்க வருமான இலக்குகள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான சுங்க வருமான இலக்குகளை நோக்கி நகர முடியாமல் போனமை தொடர்பில் பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவில் அண்மையில் வெளிப்படுத்திய உண்மைகளை வெளிப்படுத்தினார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.