ஆபத்தான நிலையில் உள்ள கரையோர வீதியில் பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு பிரவேசிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடு இன்று (09) இடம்பெறவுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த பகுதிகளுக்கு தமது அமைப்பின் குழுவொன்று இன்று அனுப்பி வைக்கப்படும் என அந்த அமைப்பின் கட்டமைப்பு ஆய்வு மற்றும் திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் திருமதி கஹஹெங்கொட தெரிவித்தார்.